Search My BLogs

Thursday, January 21, 2010

அபிராம வல்லியின், அருள் கோலம் காணீர்!


சந்திர மண்டல மத்யஸ்தே, மஹா திரிபுர சுந்தரீ!
ஸ்ரீ சக்ர ராஜ நிலையே! ஸ்ரீ அபிராமீ நமோஸ்துதே!!

(பாதாதி கேச பரிமள நீராஞ்சன கர்ப்பூர தீப சேவை)

01. கலையாத கல்வியும்
02. குறையாத வயதும்
03. ஓர் கபடு வாராத நட்பும்
04. கன்றாத வளமையும்
05. குன்றாத இளமையும்
06. கழுபிணியிலாத உடலும்
07. சலியாத மனமும்
08. அன்பகலாத மனைவியும்
09. தவறாத சந்தானமும்
10. தாழாத கீர்த்தியும்
11. மாறாத வார்த்தையும்
12. தடைகள் வாராத கொடையும்
13. தொலையாத நிதியமும்
14. கோணாத கோலும்
15. ஒரு துன்பமில்லாத வாழ்வும்
16. துய்யநின் பாதத்தில் அன்பும்
உதவிப் பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்!!!!!
அலையாழி அறிதுயில் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி! அபிராமியே!!


அபிராமியம்பிகா திவ்ய சரணார விந்தயோஹோ,
தீப மங்கள கர்ப்பூர நீராஞ்சனம் தரிசயாமி!


அருள்வாமி அபிராமி திருவடிச் சரணங்களிலே,
திவ்ய மங்கள கர்ப்பூரத் தீப தரிசனம் காண்மின்களே!

இதோ, கர்ப்பூர ஆரத்தியை ஒற்றிக் கொள்ளுங்கள்! அபிராமி அம்மன் திருவடிகளே சரணம் சரணம்!!


நண்பர் குமரன் பணிவோடு சமர்ப்பித்த அபிராமி அந்தாதிப் பொருளுரை சம்பூர்ணம்!

திருச்செந்தூர் முருகா! திருவருள் புரிவாய்!

கள்ளவிழும் மலர்சூழக் கந்தா! நின் திருச்செந்தூர்
கடம்பவனம் போல மிளிரும்
கடலலைகள் நினதடியைக் காணமிக தவம்செய்து
காவடிபோல் எழுந்தாடிடும்!

துள்ளிவரும் வேல்சுழலத் தொடர்ந்தபல அசுரர்களைத்
தூள்தூளாய் அழித்த முருகா!
தொலையாத வினையகல நினதுபெயர் உரைப்பவர்முன்
தோன்றியருள் செய்யுமழகே!

பள்ளிகொண்ட பெருமான் நின் படைத்திறலைப் போற்றியுமை
பங்கன்மகன் எனப்புகழுவார்
பக்கமிரு தேவியரும் துணை நின்று நின்பெருமை
பாடியருள் பாலிப்பராம்!

வள்ளிதெய் வானையுடன் செந்தூரில் நின்றாடும்
வண்ணமயில் மீதூர்பவா
வளர்தமிழில் நினைப்பாட வாயெல்லாம் நறுமணமே
வந்தருள்க செந்தில்வேலா!

(அருள்மிகு திருச்செந்தூர் முருகன் திருகோவில் குடமுழுக்கு விழா(ஜூலை2,-2009)
அன்று அமரிக்காவிலிருந்து எழுதப்பட்டது.)
1) ஒரு ஊர்ல ஒரு முயல் இருந்துச்சாம். சதா சர்வ காலமும் ஒரு மரத்த சுத்தி இருக்கர புல் வெளீல மேஞ்சுக்கினே இருக்குமாம். நாள் முழுக்க அங்கையும் இங்கையும் ஓடி தின்னாதான், ஓரளவுக்காவது வயிறு நிரம்புமாம்.
சாயங்காலம் ஆனா, நாள் முழுக்க நடந்த களைப்புல அக்கடான்னு வானத்தை பாத்துக்கிட்டு படுக்குமாம்.
அந்த மரத்துக்குக்கு மேல ஒரு காக்கா இருந்துச்சாம். அது எப்பப் பாத்தாலும், ஒன்னியும் பண்ணாம, மரக் கிளைல ஜாலியா ஒக்காந்துக்கினே இருக்குமாம்.
ஒரு நாள் காக்காவ பாத்த முயல், "காக்கா நீ மட்டும் ஒன்னியும் பண்ணாம ஒக்காந்த எடத்துலையே ஒக்காந்துக்கினு இருக்கியே, நானும் அப்படி வெட்டியா ஒக்காரலாமா"ன்னு.
காக்கா "ஓ, தாராளமா இரேன்"னு சொல்லிச்சாம்.
முயலும், "மரத்துக்குக் கீழ ஒய்யாரமா அக்கடான்னு ஒக்காந்துக்கிச்சாம்".
கொஞ்ச நேரத்துல எல்லாம், அந்தப் பக்கமா வந்த நரி, முயலை லபக்னு கவ்விக்கிட்டு போயிடுச்சாம்.

கதை கூறும் கருத்ஸ்?: வெட்டியா ஒக்காரணும்னா, பெரிய பதவில இருக்கணும். உங்க மேனேஜர் வெட்டியா இருக்கலாம். நீங்க இருக்கக் கூடாது.
Moral of the story: To be sitting and doing nothing, you must be sitting very high up.

2) ஒரு கோழி மாடு கிட்ட கேட்டுதாம், "மாடு, எனக்கு அந்த மரத்து மேல ஏறி உச்சில போயி நிக்கணும்"னு. மாடு சொல்லிச்சாம், "அதுக்கென்ன, சாணத்தைச் (B.S bull shit) சாப்பிட்டா, உனக்கு தேவையான சத்து கெடைக்கும், அப்பாலிக்கா மரத்துக்கு மேல சட்டுனு ஏறிடலாம்"னு.
கோழியும், மாட்டு சாணத்தை தின்னுட்டு, கிடு கிடுன்னு மரத்துக்கு உச்சில போயி ஒக்காந்துக்குச்சாம்.
அந்த நேரம் பாத்து அங்க வந்த கழுகு, கோழிய லபக்னு தூக்கிக்கினு போயிடுச்சாம்.

கதை கூறும் கருத்ஸ்?: B.S கொஞ்ச காலத்துக்கு ஒதவி, உங்கள பெரிய பதவியில் ஒக்கார வைக்குமாம். ஆனா, ரொம்ப காலம், வெறும் B.Sனே இருந்தீங்கன்னா, அங்க நீங்க ரொம்ப காலம் தாக்குப் பிடிக்க முடியாதாம்.
Moral of the story: B.S. might get you to the top, but it won't keep you there.


These all are from:http://surveysan.blogspot.com/2010/01/blog-post.html

தத்துவம்ப்பா...

1) ஒரு ஊர்ல ஒரு முயல் இருந்துச்சாம். சதா சர்வ காலமும் ஒரு மரத்த சுத்தி இருக்கர புல் வெளீல மேஞ்சுக்கினே இருக்குமாம். நாள் முழுக்க அங்கையும் இங்கையும் ஓடி தின்னாதான், ஓரளவுக்காவது வயிறு நிரம்புமாம்.
சாயங்காலம் ஆனா, நாள் முழுக்க நடந்த களைப்புல அக்கடான்னு வானத்தை பாத்துக்கிட்டு படுக்குமாம்.
அந்த மரத்துக்குக்கு மேல ஒரு காக்கா இருந்துச்சாம். அது எப்பப் பாத்தாலும், ஒன்னியும் பண்ணாம, மரக் கிளைல ஜாலியா ஒக்காந்துக்கினே இருக்குமாம்.
ஒரு நாள் காக்காவ பாத்த முயல், "காக்கா நீ மட்டும் ஒன்னியும் பண்ணாம ஒக்காந்த எடத்துலையே ஒக்காந்துக்கினு இருக்கியே, நானும் அப்படி வெட்டியா ஒக்காரலாமா"ன்னு.
காக்கா "ஓ, தாராளமா இரேன்"னு சொல்லிச்சாம்.
முயலும், "மரத்துக்குக் கீழ ஒய்யாரமா அக்கடான்னு ஒக்காந்துக்கிச்சாம்".
கொஞ்ச நேரத்துல எல்லாம், அந்தப் பக்கமா வந்த நரி, முயலை லபக்னு கவ்விக்கிட்டு போயிடுச்சாம்.

கதை கூறும் கருத்ஸ்?: வெட்டியா ஒக்காரணும்னா, பெரிய பதவில இருக்கணும். உங்க மேனேஜர் வெட்டியா இருக்கலாம். நீங்க இருக்கக் கூடாது.
Moral of the story: To be sitting and doing nothing, you must be sitting very high up.

2) ஒரு கோழி மாடு கிட்ட கேட்டுதாம், "மாடு, எனக்கு அந்த மரத்து மேல ஏறி உச்சில போயி நிக்கணும்"னு. மாடு சொல்லிச்சாம், "அதுக்கென்ன, சாணத்தைச் (B.S bull shit) சாப்பிட்டா, உனக்கு தேவையான சத்து கெடைக்கும், அப்பாலிக்கா மரத்துக்கு மேல சட்டுனு ஏறிடலாம்"னு.
கோழியும், மாட்டு சாணத்தை தின்னுட்டு, கிடு கிடுன்னு மரத்துக்கு உச்சில போயி ஒக்காந்துக்குச்சாம்.
அந்த நேரம் பாத்து அங்க வந்த கழுகு, கோழிய லபக்னு தூக்கிக்கினு போயிடுச்சாம்.

கதை கூறும் கருத்ஸ்?: B.S கொஞ்ச காலத்துக்கு ஒதவி, உங்கள பெரிய பதவியில் ஒக்கார வைக்குமாம். ஆனா, ரொம்ப காலம், வெறும் B.Sனே இருந்தீங்கன்னா, அங்க நீங்க ரொம்ப காலம் தாக்குப் பிடிக்க முடியாதாம்.
Moral of the story: B.S. might get you to the top, but it won't keep you there.